அவனது ஊர் உறவினர் காசி சென்னையில் ஷேர் ஆட்டோ ஒட்டிகொண்டிருந்தார் .சென்னை வரும்போதெல்லாம் அவரது ரூமில் தான் தங்குவான் . இந்த முறையும் அங்கேதான் தங்கியிருந்தான் .தற்போது காசிக்கு திருமணம் ஆகியிருந்தது .அதனால் அவர் தனியாக வீடு பார்த்து தன் மனைவியோடு தங்கியிருந்தார் .
அவனது (அமுதன் -நம்ம கதாநாயகன்) அறையில் காசியின் அக்கா மகன் அரசும் தங்கியிருந்தான் .இவர்கள் கூட ஒரு தற்காலிக விருந்தாளியும்(அசோக் ) தங்கியிருந்தார் . அரசும், அசோக்கும் ஏற்க்கனவே நன்றாகவே பழகியிருந்தனர் இதில் மூவருக்குள்ளும் சிறு சிறு முரண்பாடுகள் இருந்தது அரசு படிப்பில் ஈடுபாடில்லாதவன் அதனால் அவனுக்கு உலக அறிவு கொஞ்சம் குறைவு .அசோக் பட்டங்கள் பெற்றவர் , அனைத்தைப் பற்றியும் அவர் வாதிடுவர் . இருவருக்குள்ளும் அடிக்கடி வாதங்கள் முற்றிபோகும் இதையெல்லாம் சத்தமில்லாமல் கவனிப்பது அமுதனின் குணம் . காசியும் , அரசும் எதிரிகள் போலவே நடந்து கொள்வார்கள் .காசி சென்னையில் பத்துவருடங்களாக கஷ்டப் பட்டு தற்போது சொந்தமாக இரண்டு ஆட்டோக்களை வாங்கியுள்ளார் . அவருக்கு அதுமிகப்பெரிய சாதனை .அதிலொரு ஆட்டோவைத் தான் அரசு ஓட்டிகொண்டிருக்கிறான் . தினமும் வண்டியின் முதலாளிக்கு அதாவது காசிக்கு 400 ரூபாய் வாடகை தரவேண்டும். அதைக் கறாராக வசூலித்து விடுவர் காசி .அரசு காலையிலேயே எழுந்து சவாரிக்கு போகவேண்டும் .இரவில் சீக்கிரம் ரூமுக்கு வந்து விட வேண்டும் என்றும் ஆசைப்படுவார் . ஆனால் அரசு இரவில் லேட்டாகத் தான் வருவான் . அதனால் கலையில் லேட்டாகத் தான் எழுந்திருப்பான் இது போன்ற சிறு சிறு காரணங்களுக்காக இருவருக்குள்ளும் அதிக வாக்குவாதங்கள் ஏற்படும் போதெல்லாம் இடையில் அமுதன் மட்டிக்கொண்டு வேறுவழியில்லாமல் அசட்டு சிரிப்போடு இருவருக்கும் ஜால்ரா போடுவான்.
அன்று திங்கட்கிழமை அமுதன் மூன்று பிலான்ங்கள் வைத்திருந்தான்
வேளச்சேரியில் ஒரு டீ.வி ஷோ ரூமில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற தினத்தந்தி விளம்பரத்தின் உதவியோடு அங்கு சென்று வேலை கேட்பது என்றும் அதே தினத்தந்தி விளம்பரத்தின் உதவியோடு பேனர் பிரிண்டிங் கம்பெனிக்கு வேலை கேட்டு செல்வது இதில் இரண்டும் நடக்க வில்லை என்றால் உதயம் த்யேட்டரில் எதாவது மொக்கையான படம் பார்ப்பது . இவைதான் அவனின் முப்பெரும் திட்டங்கள் (அமுதன் வேலை தேடி செல்லும் இடங்களில் எதாவது ஏமாற்றம் ஏற்ப்பட்டால் எதாவது நன்றாய் இல்லாத படம் பார்ப்பது வழக்கம் ஏனெனில் படம் முடிந்தவுடம் இவர்களெல்லாம் படம் எடுக்கும் போது நான் எடுக்க முடியாதா!! என்று அவனுக்குள்ளே நம்பிக்கை ஏற்ப்படுதிகொள்வான் .அவன்கிளம்பி விட்டான் வேலை தேடி இன்று என்னென ஏமாற்றங்கள் அவனுக்கு கத்திருக்கோ என்ற எண்ணத்தோடு ..............
தொடரும்.........................
அவனது (அமுதன் -நம்ம கதாநாயகன்) அறையில் காசியின் அக்கா மகன் அரசும் தங்கியிருந்தான் .இவர்கள் கூட ஒரு தற்காலிக விருந்தாளியும்(அசோக் ) தங்கியிருந்தார் . அரசும், அசோக்கும் ஏற்க்கனவே நன்றாகவே பழகியிருந்தனர் இதில் மூவருக்குள்ளும் சிறு சிறு முரண்பாடுகள் இருந்தது அரசு படிப்பில் ஈடுபாடில்லாதவன் அதனால் அவனுக்கு உலக அறிவு கொஞ்சம் குறைவு .அசோக் பட்டங்கள் பெற்றவர் , அனைத்தைப் பற்றியும் அவர் வாதிடுவர் . இருவருக்குள்ளும் அடிக்கடி வாதங்கள் முற்றிபோகும் இதையெல்லாம் சத்தமில்லாமல் கவனிப்பது அமுதனின் குணம் . காசியும் , அரசும் எதிரிகள் போலவே நடந்து கொள்வார்கள் .காசி சென்னையில் பத்துவருடங்களாக கஷ்டப் பட்டு தற்போது சொந்தமாக இரண்டு ஆட்டோக்களை வாங்கியுள்ளார் . அவருக்கு அதுமிகப்பெரிய சாதனை .அதிலொரு ஆட்டோவைத் தான் அரசு ஓட்டிகொண்டிருக்கிறான் . தினமும் வண்டியின் முதலாளிக்கு அதாவது காசிக்கு 400 ரூபாய் வாடகை தரவேண்டும். அதைக் கறாராக வசூலித்து விடுவர் காசி .அரசு காலையிலேயே எழுந்து சவாரிக்கு போகவேண்டும் .இரவில் சீக்கிரம் ரூமுக்கு வந்து விட வேண்டும் என்றும் ஆசைப்படுவார் . ஆனால் அரசு இரவில் லேட்டாகத் தான் வருவான் . அதனால் கலையில் லேட்டாகத் தான் எழுந்திருப்பான் இது போன்ற சிறு சிறு காரணங்களுக்காக இருவருக்குள்ளும் அதிக வாக்குவாதங்கள் ஏற்படும் போதெல்லாம் இடையில் அமுதன் மட்டிக்கொண்டு வேறுவழியில்லாமல் அசட்டு சிரிப்போடு இருவருக்கும் ஜால்ரா போடுவான்.
அன்று திங்கட்கிழமை அமுதன் மூன்று பிலான்ங்கள் வைத்திருந்தான்
வேளச்சேரியில் ஒரு டீ.வி ஷோ ரூமில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற தினத்தந்தி விளம்பரத்தின் உதவியோடு அங்கு சென்று வேலை கேட்பது என்றும் அதே தினத்தந்தி விளம்பரத்தின் உதவியோடு பேனர் பிரிண்டிங் கம்பெனிக்கு வேலை கேட்டு செல்வது இதில் இரண்டும் நடக்க வில்லை என்றால் உதயம் த்யேட்டரில் எதாவது மொக்கையான படம் பார்ப்பது . இவைதான் அவனின் முப்பெரும் திட்டங்கள் (அமுதன் வேலை தேடி செல்லும் இடங்களில் எதாவது ஏமாற்றம் ஏற்ப்பட்டால் எதாவது நன்றாய் இல்லாத படம் பார்ப்பது வழக்கம் ஏனெனில் படம் முடிந்தவுடம் இவர்களெல்லாம் படம் எடுக்கும் போது நான் எடுக்க முடியாதா!! என்று அவனுக்குள்ளே நம்பிக்கை ஏற்ப்படுதிகொள்வான் .அவன்கிளம்பி விட்டான் வேலை தேடி இன்று என்னென ஏமாற்றங்கள் அவனுக்கு கத்திருக்கோ என்ற எண்ணத்தோடு ..............
தொடரும்.........................

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக